பரபரப்பான அரசியல் சூழலில் வெளிநாடு கிளம்பிய விஜயகாந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை வெளிநாட்டுக்கு கிளம்பிச் சென்றார்.
லோக்சபா தேர்தலில் எந்த கட்சியுடன் எந்த கட்சி கூட்டணி வைக்கும் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறது என்று தெரியாமல் உள்ளது. கூட்டணி குறித்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் விஜயகாந்த் இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் வெளிநாட்டுக்கு கிளம்பிச் சென்றார். குடும்ப நண்பர்களின் அழைப்பை ஏற்று அவர் வெளிநாடு சென்றுள்ளார்.
அவர் சிங்கப்பூர், மலேசியா, துபாயில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications