மதுவிலக்கு பற்றி ஜெ. அறிவிக்காதது 'பெரும் ஏமாற்றம்- அதிர்ச்சி': விஜயகாந்த்
சென்னை: இந்திய நாட்டின் 69வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக விஜயகாந்த் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ஜெயலலிதா மதுவிலக்கு குறித்த அறிவிப்பினை வெளியிடாதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அதில், "இந்தியாவின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி உரையாற்றிய ஜெயலலிதா, தமிழக மக்கள் பெரிதும் எதிர்பார்த்த மதுவிலக்கு குறித்து எதுவுமே அறிவிக்காதது பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

கடந்த ஒருமாத காலமாக இளைஞர்கள், மாணவர்கள், தாய்மார்கள், சமூக ஆர்வலர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசியல் இயக்கங்கள் என்று ஒட்டுமொத்த தமிழகமே மதுவுக்கு எதிராக போராடி, தமிழகமே ஒரு போர்க்களம் போல் காட்சியளிக்கின்ற நேரத்தில், எதுவுமே நடக்காதது போல மக்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப்போன்று தனக்கே உரிய ஆணவப்போக்கோடு ஜெயலலிதா உரையாற்றி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சட்ட மன்றத்தில் எப்படி நடைமுறை படுத்த முடியாத திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பாரோ, அதேபோன்று சுதந்திர தின உரையும், சுய விளம்பரத்திற்கு பயன்பட்டிருக்கிறதே தவிர, மக்களுக்குப் பயன்தரும் எந்த ஒரு அறிவிப்பும், இந்த சுதந்திரதின உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. மக்களுக்கு அடிப்படை தேவையான உணவு, உடை, இருக்க இடம், குடிக்க தண்ணீர், தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொள்ள வருமானம் தரும் வகையில் ஒரு வேலைவாய்ப்பு என்று மக்களுக்கான எந்த ஒரு நலத்திட்ட அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை.

தமிழகம் ஏறத்தாழ நாலரை லட்சம் கோடி கடனில் இருக்கின்றபோது நாட்டை முன்னேற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து அறிவிக்காமல் வழக்கம்போலவே வெற்றுத்திட்டங்களை அறிவித்திருப்பது, ஜெயலலிதாவிடம் தமிழக மக்கள் எதிர்பார்த்த ஒன்றுதான்.
அரசு எந்திரத்திலும், நிர்வாகத்திலும் ஊழலும், லஞ்சமும் இன்றி ஒரு நல்லாட்சி என்று நடக்கிறதோ அன்றுதான் நாம் பெற்ற சுதந்திரத்திற்கான மரியாதையை மக்கள் புரிந்துகொள்ளமுடியும். அடுத்து வரும் ஆட்சியாவது அப்படி ஒரு ஆட்சியாக அமையும் விதத்தில், இந்த ஆட்சியை அகற்றி, ஒரு நல்லாட்சி அமைய மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications