இடைத்தேர்தலில் தேமுதிகவிற்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் உண்மையானவை: விஜயகாந்த்
நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் தேமுதிகவிற்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் உண்மையான வாக்குகள் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆளும் கட்சியாக இருப்பவர்கள் வெற்றி பெறுவதும், எதிர்கட்சியாக இருப்பவர்கள் தோல்வி பெறுவதும், இடைத்தேர்தல்களில் எழுதப்படாத விதியாக மாறியுள்ளது. இந்தசூழ்நிலையில் தேமுதிகவுக்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் உண்மையான வாக்குகள் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், எலக் ஷன் என்றாலே கலக் ஷன் என்று ஆகிவிட்ட சூழ்நிலையில், தேமுதிகவுக்கு கிடைத்த அத்தனை வாக்குகளும் உண்மையான வாக்குகள். தோல்வி என்றைக்கும் நிரந்தரம் இல்லை, மாற்றம் ஒன்றுதான் என்றும் மாறாதது. அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்குள் தேமுதிக வேட்பாளர்கள் உட்பட யாரையும் அனுமதிக்காமல் அரசு அதிகாரிகள் செயல்பட்டது உண்மையிலையே கண்டனத்துக்குரியது.

அனுமதி வழங்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட தேமுதிகவினரை கைது செய்து, பின் விடுவித்தது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. அதிக பணம் விநியோகித்ததன் விளைவாக மறுதேர்தல் நடந்த போதும், மீண்டும் அதே பாணியில் தொகுதி முழுக்க பணம் விநியோகம் செய்து முறையில்லா தேர்தல்களை மூன்று தொகுதிகளிலும் அரங்கேற்றியுள்ளனர்.
ஆளும் கட்சியாக இருப்பவர்கள் வெற்றி பெறுவதும், எதிர்கட்சியாக இருப்பவர்கள் தோல்வி பெறுவதும், இடைத்தேர்தல்களில் எழுதப்படாத விதியாக மாறியுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.
அதேபோல் இப்பொழுது நடக்கும் அதிமுக ஆட்சியில் அனைத்து இடைத்தேர்தல்களிலும் திமுக தோல்வியுறுவதும், பாண்டிச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி தேர்தலில் ஆளும் கட்சியான காங்கிரசே வெற்றி பெற்றதுமே அதற்கான சான்று. எனவே ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் மூலம் பெரும் இதுபோன்ற வெற்றிகளை பற்றி நாம் அதிகம் யோசிக்கத்தேவையில்லை.
இந்த மூன்று தேர்தல்களிலும் அயராது பாடுபட்ட கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்தவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றிகளும், தோல்விகளும் மனித வாழ்வில் எல்லோருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடப்பவை, எனவே இந்த இடைத்தேர்தலின் முடிவுகளை பொருட்படுத்தாது, மக்களுக்கான பணியில் நாம் என்றும் முழுமூச்சுடன் செயல்படுவோம். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications