அனிதாவிற்கு அஞ்சலி செலுத்திய விஜயகாந்த் - இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பு
அரியலூர் மாணவி அனிதாவிற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அஞ்சலி செலுத்தி விட்டு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: அரியலூர் மாணவி அனிதாவின் உடலுக்கு நள்ளிரவில் வந்து அஞ்சலி செலுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த், இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.
நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவி அனிதா வெள்ளிக்கிழமையன்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலுக்கு அரசியல் கட்சித்தலைவர்களும், பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினர்.

வேலூரில் பக்ரீத் விழாவில் பங்கேற்க சென்றிருந்த விஜயகாந்த், அரியலூர் மாவட்டம் குழுமூருக்கு வந்து அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தி விட்டு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றார்.












Click it and Unblock the Notifications