போலி மருத்துவர்களை கடுமையான சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும் - விஜயகாந்த்
சென்னை: தமிழகத்தில் போலியாக உள்ள மருத்துவர்களை ஒழிக்கவும் அவர்களை கடுமையாக தண்டிக்கவும் புதிய சட்டம் தேவை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்
இது தொடர்பாக இன்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தின் பல இடங்களில் போலி மருத்துவர்கள் கருக்கலைப்பு சம்பவம் மற்றும் ஸ்கேன் நிலையங்களில் செயல்படுவதை அனைவரும் அறிவர். போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரித்த கும்பலுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. தண்டனை முடிந்து சிறையில் இருந்து விடுதலையானவுடன், அதே நபர்கள் போலிச் சான்றிதழ்கள் தயாரித்ததற்காக காவல்துறை கைது செய்து இருப்பது, குற்றம் செய்தவர்கள் கைது ஆவது, சிறைக்கு செல்வது, விடுதலை ஆவது என்பது தொடர்கதையாகவே இருக்கிறது.

இதுபோன்ற குற்றங்கள் நிகழாவண்ணம் கண்காணிக்க வேண்டும். போலி மருத்துவர்களை கண்டுபிடித்து நடைமுறை சட்டப்படி நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்க சாட்சிகள் ஒத்துழைக்காததால், போலி மருத்துவர்களை தண்டிக்க முடியாதநிலை உள்ளது. தமிழகத்தில் 30 ஆயிரம் போலி மருத்துவர்கள் செயல்படுவதாக 2014 ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் நாளில் இந்திய மருத்துவ தலைவர் பத்திரிகையில் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மருத்துவத்துறை அதிகாரிகள் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து ஒழிக்க ஆணை பிறப்பித்துள்ளது.
போலி மருத்துவர்களிடம் மருத்துவம் பார்த்து இறந்த நோயாளிகள் குறித்த செய்திகளும், பத்திரிகைகளில் வந்துள்ளது. கருக்கலைப்பு செய்யும் அளவில் போலி மருத்துவர்களின் தொழில் வளர்ச்சியை நடைமுறை சட்டங்களால் தடுக்க முடியாத நிலையாக இருப்பின், புதிய சட்டம் இயற்றலாமே என்கிற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுகிறது.
இனிமேலாவது சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, கடுமையான சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications