மக்களை காக்க வேண்டிய போலீசார் மதுக்கடைக்கு காவல் இருப்பது வெட்கக்கேடு: விஜயகாந்த்
சென்னை: மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசார் டாஸ்மாக் மதுபானக்கடைகளுக்கு பாதுகாவல் செய்வது வெட்கக்கேடானது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டித்துள்ளார்.
விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி இன்று நடைபெறும் கடையடைப்பு போராட்டத்திற்கு தேமுதிக முழு ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே தேமுதிக நிர்வாகிகளையும், தொண்டர்களையும், அதிமுக அரசின் காவல்துறை நேற்று இரவோடு இரவாக கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜனநாயக ரீதியில் அகிம்சை வழியில் நடைபெறும் போராட்டங்களில் இதுபோன்ற அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு கைது செய்வதில்லை. போராட்டத்தில் ஈடுபடும்போது கைது செய்யப்படுவதே ஜனநாயக நெறியாகும். ஆனால் போராட்டத்திற்கு முன்பே தேமுதிகவினர் மீதுள்ள அச்சம் காரணமாக அரசு அவர்களை கைது செய்துள்ளது. முழு அடைப்பு வெற்றி பெறக்கூடாது என்பதே நோக்கம்.
அப்படி அரசுக்கு பயமில்லை என்றால், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக வெளியேவிட வேண்டும். இதுபோன்ற மிரட்டல்களுக்கெல்லாம் தேமுதிக ஒருபோதும் அஞ்சாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறை, கேவலமாக டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு காவல் இருப்பது போன்ற வெட்கக்கேடான விஷயம் வேறெதுவுமில்லை.
மதுவால் ஏற்படும் குற்றச்செயல்கள் தொடர்பான வழக்குகளில் கோர்ட்டுக்கு பொய் தகவலை அரசு அளித்து வருகிறது. எனவே, நீதிமன்றத்தையே ஏமாற்றும் போக்கில் செயல்படுகிறது இந்த அரசு. மேன்மைதாங்கிய ஹைகோர்ட் நீதியரசர்கள், தமிழகத்தில் மதுவிலக்கிற்காக நடைபெறும் மாணவர்கள் போராட்டத்தையும், மக்கள் போராட்டத்தையும், அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள் நடத்தும் போராட்டங்களையும், ஊடகங்களில் பார்த்திருப்பார்கள்.
எனவே, தமிழகத்தில் தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்துவதன் அவசியம் கருதி, தாங்களாகவே முன்வந்து (சுமுட்டோ) நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications