நாயுடுவுக்கு விஜயகாந்த்தின் இதயமார்ந்த நல் வாழ்த்துகள்...!

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
சீமாந்திரா மாநிலத்தின் முதலமைச்சராக இன்று பொறுப்பேற்க உள்ள தங்களுக்கும், தங்களுடன் பொறுப்பேற்கும் சக அமைச்சர் பெருமக்களுக்கும், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் என்னுடைய இதயமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
தங்களுடைய கடுமையான உழைப்பும், உறுதியும்தான் பல தடைகளையும் தாண்டி மாபெரும் வெற்றியை தங்களுக்கும், தங்களுடைய தெலுங்கு தேசம் கட்சிக்கும் பெற்றுத்தந்துள்ளது. மக்களின் மாபெரும் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது.
விவசாயம், தொழில், கல்வி, கணினி, தொழில்நுட்பம், சுகாதாரம், வேலைவாய்ப்பு, மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டு, மாநில மக்களின் வளமான வாழ்விற்கு தங்களுடைய தலைமையிலான ஆட்சி வழிவகுக்கும் என்று விஜயகாந்த் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications