வீரப்பன் ஜாதகம் பார்த்து வேட்டையாடிய விஜயகுமார் ஐபிஎஸ்.... சில சுவாரஸ்ய தகவல்
சந்தனக்கடத்தல் வீரப்பன் வேட்டை நடந்தது எப்படி என்று ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகவும் உள்ள விஜயகுமார் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை: சந்தனக்கடத்தல் வீரப்பன் 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வேட்டைக்கு தலைமையேற்ற முன்னாள் காவல்துறை தலைவர் விஜயகுமார், 'வீரப்பன் சேசிங் தி பிரிகண்ட்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் வீரப்பனின் ஜாதகத்தினை இணைத்துள்ளார். வீரப்பன் வேட்டைக்கும் ஜாதகத்திற்கு உள்ள தொடர்பு குறித்து புத்தக வெளியிட்டு விழாவில் சுவாரஸ்ய தகவலை கூறினார்.
சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வால்டர் தேவாரம் உள்ளிட்ட முக்கிய காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். புத்தகம் பற்றி சிவாஜி கணேசன் மூத்த மகன் ராம்குமார் சில கேள்விகளை விஜயகுமாரிடம் கேட்டார். அதற்கு அவர் அளித்த பதில்கள் சுவாரஸ்யமாகவும், சற்றே அதிர்ச்சியாகவும் இருந்தது.

மகனை கொன்ற வீரப்பன்
வீரப்பனை பிடிக்க சஞ்சய் அரோரா தலைமையிலான குழுவினர் வீரப்பனை நெருங்கிய போது குழந்தையின் அழுகுரல் தங்களை காட்டிக்கொடுத்து விடும் என்று அஞ்சி அந்த குழந்தையை கொல்ல உத்தரவிட்டார். அது வேறு யாருடைய குழந்தையுமல்ல வீரப்பனின் சொந்த குழந்தைதான் என்றார் விஜயகுமார்.

வீரப்பன் ஜாதகம்
விஜயகுமார் தனது புத்தகத்தில் வீரப்பன் ஜாதகத்தை இணைத்தது ஏன் என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் சுவாரஸ்யமாகவே இருந்தது. வீரப்பன் பிறந்த ஊர் கோபி நத்தம். தேதி ஜனவரி 18, 1957 தந்தை பெயர் முனியசாமி, தாய் பொண்ணுத்தாயம்மாள். இந்த ஜாதகம் வீரப்பன் ஜாதகம் என்பது தெரியவந்தது. இதை வைத்து அவர் எந்தெந்த காலகட்டத்தில் பலவீனமாக இருப்பார் என்பதை தெரிந்து கொண்டதாக கூறினார்.

ராஜதண்டனை
ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காண்பித்த போது அவர் நீண்ட காலம் வனவாசத்தில் இருப்பார் என்றும் அவருக்கு ராஜதண்டனை கிடைக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. 14, 19, 32,44, 55 ஆகிய காலகட்டங்களில் பலவீனமாக இருப்பார்கள் என்றும் கூறினார்கள்.

வேட்டைக்கு நல்ல நாள்
வீரப்பனை வேட்டையாட அக்டோபர் 18தான் நல்ல நாள் என்றும் கூறினார்கள். வீரப்பனை பிடிக்க நாங்கள் எந்த நல்ல தகவலையும் தவற விட தயாராக இல்லை என்றும் கூறினார் விஜயகுமார். அதேபோல 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ல் வீரப்பன் கொல்லப்பட்டார்.

ஆபரேசன் பட்டாம்பூச்சி கூடு
வீரப்பனை பிடிக்க போலீஸ் வைத்திருந்த பெயர் 'ஆபரேசன் பட்டாம்பூச்சி கூடு' வெற்றியடைந்த போது வீரப்பன் மீசை மழிக்கப்பட்டு எடை குறைந்திருந்தது. சடலமாகத்தான் வீரப்பனை பார்த்தேன் என்றும் விஜயகுமார் கூறினார். வித்தியாசமான உணர்வாக இருந்தது என்று தனது கடந்த கால நினைவுகளை புத்தக வெளியீட்டு விழாவில் அசைபோட்டார் விஜயகுமார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications