போர்சே கார் விபத்து: போதையில் கார் ஓட்டிய விகாஷ் ஆனந்துக்கு இடைக்கால ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடிபோதையில் போர்சே காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி ஆட்டோ டிரைவரின் உயிரைப் பறித்த கார் ரேஸ் வீரர் விகாஷ் ஆனந்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

கடந்த மாதம் 19 ஆம் தேதி அதிகாலையில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அதிவேகமாக வந்த போர்சே கார் ஒன்று சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஆட்டோக்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன. இந்தக் கோர விபத்தில் ஆட்டோக்களுக்குள் உறங்கிக் கொண்டிருந்த டிரைவர்களும் படுகாயமடைந்தனர். டிரைவர் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 11பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

vikas anand gets Interim bail

சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த விகாஷ் மற்றும் அவரது நண்பர் சரண் இருவரும் குடிபோதையில் தாறுமாறாக போர்சே காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இதில் விகாஷ் என்பவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவரின் மகன் என்றும் அவர் தான் காரை ஓட்டிச்சென்றார் என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குடிபோதையில் வாகனம் ஒட்டி விபத்து ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்ட விகாஷ் ஆனந்த் சிறையில் அடைக்கப்பட்டுயிருந்தார். இதனிடையே ஜாமீன் கோரி விகாஷ் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்

சட்ட படிப்பிற்கான தேர்வு எழுத இருப்பதால் இடைக்காலமாக வரும் 20-ம் தேதி வரை விகாஷ் ஆனந்த்க்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மீண்டும் 21 ம் தேதி சைதாப்பேட்டை 18 வது குற்றவியல் நீதிமன்றத்தில் விகாஷ் ஆஜராக உத்தரவு பிறபிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+