விக்கிரவாண்டியில் அதிமுக பணப்பட்டுவாடா செய்கிறது.. திமுக தேர்தல் ஆணையத்தில் அதிரடி புகார்!
Recommended Video
சென்னை: விக்கிரவாண்டியில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
நாடு முழுக்க 18 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளில் சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் நடந்து வருகிறது. அதேபோல் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலும் நடந்து வருகிறது. தமிழகத்தில் இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது.
விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரிக்கு இடைத்தேர்தல் நடந்து வருகிறது. இதற்காக மக்கள் காலையில் இருந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

ஏன் தேர்தல்
விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த கே. ராதாமணி இருந்தார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று கே. ராதாமணி சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர் மரணம் அடைந்ததை அடுத்து விக்கிரவாண்டியில் தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று தேர்தல் நடக்கிறது.

யார் எல்லாம்
விக்கிரவாண்டி தொகுதியில், திமுக வேட்பாளராக நா.புகழேந்தியும், அதிமுக வேட்பாளராக, முத்தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்கள். இங்கு எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று திமுக தீவிரமாக பிரச்சாரம் செய்தது. அதேபோல் அதிமுக தலைவர்களும் தங்களது கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து இங்கு பிரச்சாரம் செய்தனர்.

கட்சி
இந்த நிலையில் விக்கிரவாண்டியில் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக திமுக புகார் அளித்துள்ளது.தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் திமுக புகார் அளித்துள்ளது. திமுக வழக்கறிஞர் பிரிவினர் சத்யபிரத சாஹுவை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.

எப்படி புகார்
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிகளவில் வெளியூர்வாசிகள் தங்கியுள்ளதாகவும், அவர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று, அதிமுகவிற்கு வாக்களிக்கும்படி வாக்காளர்களை வலியுறுத்துவதாகவும், இதற்காக பணம் கொடுப்பதாகவும் திமுக தனது புகாரில் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications