இரை தேடி வந்து மின்சாரம் தாக்கி இறந்த குரங்கு.. அடுத்து நடந்தது நெஞ்சை நெகிழ வைக்கும்!
இறந்த குரங்கிற்கு இறுதி சடங்கு செய்யப்பட்டுள்ளது.
ஆம்பூர்: இறந்த குரங்கு ஒன்றிற்கு இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர் அருகே மிட்டாளம் வன்னியநாதபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலும் விவசாய நிலங்கள்தான் அதிகம் உள்ளது. மேலும் அதன் பக்கத்திலேயே வனப்பகுதியும் இருக்கிறது.

விவசாய நிலங்கள்
இந்த வனப்பகுதியில் இருந்து நிறைய வன விலங்குகள் அடிக்கடி இரை தேடி விவசாய நிலத்திற்கு வந்துவிடும். அங்கு சிதறி கிடக்கும் உணவினை தின்றுவிட்டு விலங்குகள் மீண்டும் காட்டு பகுதிக்குள் சென்றுவிடும்.

உயிரிழந்த குரங்கு
அப்படித்தான் கடந்த திங்கட்கிழமை காலையும், வனப்பகுதியிலிருந்து குரங்குகள் கூட்டம் விவசாய நிலங்கள் உள்ள பகுதிக்கு வந்துவிட்டது. அங்குள்ள மரங்களில் இங்குமங்கும் தாவிக் கொண்டு இருந்தன. அப்படி மரத்திற்கு மரம் தாவும்போது, ஒரு குரங்கு அங்கிருந்த மின்கம்பியின் மீது தவறி விழுந்துவிட்டது. இதில் அங்கேயே மின்சாரம் தாக்கி அந்த குரங்கு உயிரிழந்தது.

பெண்கள் ஒப்பாரி
இதனை கண்ட வன்னியநாதபுரம் இளைஞர்கள் எல்லாம் ஒன்று கூடினார்கள். தங்களுக்குள் பணத்தினை வசூல்செய்து இறுதி சடங்கு செய்வதற்கான பொருட்களை எல்லாம் வாங்கி வந்தனர். பச்சை ஓலையில் பாடைகட்டி, இறந்த மனிதர்களுக்கு செய்வது போல குரங்கிற்கும் இறுதி சடங்கு செய்தனர். ஆனால் சடங்குகள் மொத்தத்தையும் ஊர் பெரியவர்கள் செய்தார்கள். இந்த இறுதி சடங்கில் பெண்களும் கலந்து கொண்டு ஒப்பாரி வைத்து அழுதனர்.

இறுதி ஊர்வலம்
பிறகு குரங்கின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. அதில் பட்டாசுகள் வெடித்து சிதறடிக்கப்பட்டன. மேளங்கள் கொட்டப்பட்டன. இறுதியாக குரங்கினை ஊர்மக்கள் அனைவரும் சேர்ந்து அடக்கம் செய்தார்கள். குரங்கிற்கு இறுதி சடங்கை செய்ய இளைஞர்கள் மேற்கொண்டமனிதாபிமான செயலை சுற்றுவட்டார பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications