”நோட்டாவுக்கு வெல்கம் சொல்வோம்.. மாவட்டத்துடன் இணைக்காவிட்டால்”- கிராம மக்கள் முடிவு
புதுக்கோட்டை: வரும் லோக்சபா தேர்தலில் ஒரு முழு கிராமமும் நோட்டாவிற்கு ஆதரவாக தவாக்களிக்க முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம், ஆர்.பாலகுறிச்சி என்ற கிராமம்தான் அது.
அக்கிராமத்தை புதுக்கோட்டை மாவட்டத்துடன் முழுமையாக இணைக்காவிட்டால் நோட்டாவிற்கு வாக்களிப்பது என கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த ஊராட்சியில் 5 குக்கிராமங்கள் உள்ளன. 2,217 வாக்காளர்கள் உள்ளனர். ஒரு நடுநிலைப் பள்ளி, 3 தொடக்கப் பள்ளிகள் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளது.
இக்கிராம மக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை சிவகங்கை மாவட்டத்திலும், குடும்ப அட்டை புதுக்கோட்டை மாவட்டத்திலும் உள்ளது. காவல் துறை, மருத்துவத் துறை, மின்வாரிய அலுவலகங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளன.
இதனால், இந்த ஊராட்சி மக்கள் பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்கள் பெற அலைக்கழிக்கப்படுகின்றனர். அரசின் நலத் திட்டங்களும் முழுமையாகக் கிடைக்க தாமதமாகிறது.
எனவே, மாவட்ட பிரச்னைக்கு நல்ல முடிவு இல்லையெனில் நோட்டாவில் வாக்களிப்போம் என இந்த கிராம மக்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
இதுகுறித்து ஆர்.பாலகுறிச்சி ஊராட்சித் தலைவர் ஆர். பெரிய பொன்னன் கூறியபோது,
"எங்களது ஊராட்சி இரு மாவட்டங்களுக்கிடையே சிக்கியுள்ளதால் எந்த நலத் திட்டங்களும் முழுமையாக வந்தடைவதில்லை. எனவே இரு மாவட்ட ஆட்சியர்கள் கலந்தாலோசித்து சிவகங்கை அல்லது புதுக்கோட்டை மாவட்டத்தில் இணைப்பது குறித்து நல்ல முடிவு காணவேண்டும்" என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications