வெள்ளம்புதூர் சிறுவன் படுகொலை: குற்றவாளியை கைது செய்ய கோரி உறவினர்கள் தொடர் உண்ணாவிரதம்
விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புதூரில் சிறுவனை படுகொலை செய்தவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் 2-ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வெள்ளம்புதூரில் நிலத்தகராறு காரணமாக சிறுவனை கொலை செய்தவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் 2-ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெள்ளம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி(45). இவரது கணவர் இறந்துவிட்டார். இவருடன் 8 வயது மகன் சமையனும், 14 வயதில் சிறுமியும் வசித்து வந்தனர்.
இவரின் மற்ற 4 பிள்ளைகள் பெங்களூரு மற்றும திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர். சிறுமி டி தேவனூரில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சமையன் வேலம்புதூரில் உள்ள அரசுப் பள்ளியில் 4ம் வகுப்பு பயின்று வந்தார்.

சரமாரி தாக்குதல்
இந்நிலையில் கடந்த வாரம் மாற்று சமூகத்தைச் சேர்ந்த சில கும்பல் இவர்களது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ஆராயி, அவரது மகன், மகளை கடுமையாக தாக்கியது. இதில் சிறுவன் உயிரிழந்துவிட்டான்.

மருத்துவமனையில் அனுமதி
மேலும் தாயையும், மகளையும் கடுமையாக தாக்கிய கும்பல கூட்டு பலாத்காரம் செய்ததில் அவர்கள் சுயநினைவை இழந்தனர். இவர்கள் பொழுது விடிந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்து அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அதிர்ச்சி
14 சென்ட் நிலத்துக்காக சிறுவனை கொன்று , பெண்ணையும், சிறுமியையும் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த ஒரு வாரம் ஆகியும் இதுவரை போலீஸார் யாரையும் கைது செய்யவில்லை.

உறவினர்கள் போராட்டம்
சிறுவனை படுகொலை செய்து ஆராயியையும், மகளையும் பலாத்காரம் செய்த கும்பலை கைது செய்ய வேண்டும் என்று கோரி உறவினர்கள் இன்று 2-ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications