For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சொந்த ஊருக்கு ஓட்டு போட போன அரசியல் தலைவர்கள்

By Mayura Akilan
|

சென்னை: வசிப்பது சென்னை என்றாலும் வாக்களிப்பது சொந்த ஊரில் என்ற பாலிசி வைத்திருக்கின்றனர் சில அரசியல் தலைவர்கள்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டாக்டர் ராமதாஸ், நிதியமைச்சர் பா.சிதம்பரம் போன்ற தலைவர்கள் சொந்த ஊருக்குப் போய் வாக்களித்த தலைவர்கள் வரிசையில் வருகின்றனர்.

கண்டமனூர் போன ப.சி

கண்டமனூர் போன ப.சி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின் சொந்த ஊர். கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொகுதியில் சுற்றி வந்த ப.சிதம்பரம், தனது மகன், மனைவி, மருமகள் சகிதமாக கண்டனூர் வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

கலிங்கபட்டி வைகோ

கலிங்கபட்டி வைகோ

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கபட்டிதான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. இம்முறை தனது சொந்த ஊரில் குடும்பத்தினருடன் தனது சின்னமான பம்பரத்திற்கு ஓட்டு போட்டதில் வைகோவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி.

நாகர்கோவில் பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில் பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜக மாநில தலைவரும், கன்னியாகுமரி தொகுதி வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் தனது சொந்த ஊரான நாகர்கோவிலில் தனக்காக வாக்களித்தார்.

திண்டிவனம் ராமதாஸ்

திண்டிவனம் ராமதாஸ்

தைலாபுரம் தோட்டத்தில் வசிக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது குடும்பம் சகிதமாக திண்டிவனத்தில் வாக்களித்தார்.

பெரம்பலூரில் ஆ.ராசா

பெரம்பலூரில் ஆ.ராசா

நீலகிரி தொகுதியில் போட்டியிட்டாலும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் வேலூரில் உள்ளது. அங்கு சென்று ஊர்மக்களோடு வாக்களித்தார்.

ஈரோட்டில் ஈவிகேஎஸ்

ஈரோட்டில் ஈவிகேஎஸ்

திருப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், தன் மனைவி வரலட்சுமியுடன், சொந்த ஊரான ஈரோடு போய் அங்குள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

அங்கனூர் போன திருமா..

அங்கனூர் போன திருமா..

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமம்தான் சொந்த ஊர். அங்கே போய் ஓட்டு போட்டார் திருமாவளவன்.

ஈரோட்டில் ஈவிகேஎஸ்

ஈரோட்டில் ஈவிகேஎஸ்

திருப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், தன் மனைவி வரலட்சுமியுடன், சொந்த ஊரான ஈரோடு போய் அங்குள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

பெரியகுளத்தில் ஓ.பி.எஸ்

பெரியகுளத்தில் ஓ.பி.எஸ்

தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு போய் வாக்களித்தார்.

English summary
MDMK chief Vaiko Finance Minister P.Chidambaram were casted votes in their Native Villages.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X