கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்றுவது நம் கடமை.. ட்விட்டரில் நடிகர் விஷால் இரங்கல்
நீட் தேர்வு எழுதுவதற்காக மகனை கேரளா அழைத்துச்சென்று மாரடைப்பால் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் உயிரிழப்புக்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நீட் தேர்வு எழுத தமது மகனை கேரளா அழைத்துச் சென்று மாரடைப்பால் மரணமடைந்த கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்ற கஸ்தூரி மகாலிங்கத்தை மருத்துவராக்குவது நம் கடமை என நடிகர் விஷால் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுகள் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1 மணிவரை நடைபெற்றது. தமிழக மாணவர்களுக்கு மட்டும் கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சிக்கிம் என 2,000 கிமீ தொலைவுக்கு அப்பால் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்வு மையங்களை மாணவர்கள் சென்றடைவதற்குள் பெரும் மன உளைச்சலுக்குள்ளாக்கினர்.

5,000க்கும் அதிகமான தமிழக மாணவர்கள் கேரளாவில் பல தேர்வு மையங்களில் எழுதினார்கள். கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள தேர்வு மையத்திற்கு தமது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை அழைத்துக் கொண்டு, திருத்துறைபூண்டியில் இருந்து சென்றார் கிருஷ்ணசாமி.
இரவு முழுவதும் தூங்காமல் ரயிலில் நின்று கொண்டே சென்ற கிருஷ்ணசாமி, மகனை தேர்வு மையத்தில் விட்டுவிட்டு தங்கும் அறைக்குச் சென்றார். திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணசாமியின் மரணத்துக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது இரங்கலை பதிவு செய்துள்ளார்.
— Vishal (@VishalKOfficial) May 6, 2018
அதில், " இன்று நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் எனது வாழ்த்துக்கள். கடும் மன உளைச்சலுக்கும், அலைக்கழிப்புக்கும் இடையிலும் கூட தங்கள் மருத்துவக் கனவுக்காக என் தம்பி, தங்கைகள் இந்தத் தேர்வை எழுதியிருக்கிறார்கள். நீட் தேர்வுக்காக கேரளா சென்று அங்கேயே தந்தை கிருஷ்ணசாமியை பறி கொடுத்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் துயரத்தில் பங்கெடுத்துக்கொள்கிறேன். இந்த இழுப்பு ஈடு செய்ய முடியாதது. அவரை ஒரு மருத்துவராக்கி கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்றுவதும் நம் கடமை. கஸ்தூரி மகாலிங்கத்துக்கு அதற்கான உதவிகளை செய்யத் தயார். அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள்" என்று விஷால் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications