டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலைக்கு ஜெ.வின் பதில் என்ன? கேட்கிறார் கருணாநிதி
சென்னை: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலைக்கு, காவல்துறை பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள முதல்வரின் பதில் என்ன? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலக் காவல் துறை மீது நம்பிக்கை இல்லை" என்று தலைமை நீதிபதி கூறியிருப்பதற்கு பதில் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு காவல் துறைக்கு, அதன் தகுதி, திறமை, வேகம், புலனாய்வு நுணுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் "ஸ்காட்லாண்டு" காவல் துறைக்கு இணையான மதிப்பும், புகழும் ஒரு காலத்தில் உண்டு. அந்தப் பாராட்டெல்லாம் தற்போது பொய்யாய், பழங்கனவாய் ஆகி விட்டது. பரபரப்பூட்டிய மிக முக்கியமான கொலைகளில் கூட, குற்றவாளிகள் மூன்று நான்கு ஆண்டுகளாகக் கண்டுபிடிக்கப்படவே இல்லை.
செம்மரக் கடத்தல் வழக்கில் காவல் துறை அதிகாரி ஒருவரே முக்கிய குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆளுங்கட்சியினருடனான அவருடைய செல்வாக்கின் காரணமாக அந்த வழக்கு குப்பைக் கூடைக்குப் போய் விட்டது.
ஒரு மூத்த அதிகாரி தற்கொலையே செய்து கொண்டு மாண்டார். அந்த வழக்கில் அமைச்சர் ஒருவரே பதவியைப் பறிகொடுத்து சிறைக்குச் சென்றார். பின்னர் அந்த வழக்கும் எங்கிருக்கிறது என்று தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, ஏன் ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலரே பட்டப் பகலில், வெட்ட வெளியில் கொலை செய்யப்பட்ட வழக்குகள் எல்லாம் கண்டு பிடிக்கப்படவில்லை.
திருச்செங்கோட்டில் பணியாற்றி வந்த 27 வயதான விஷ்ணு பிரியா என்ற பெண் டி.எஸ்.பி., பணியில் சேர்ந்த ஏழு மாதக் காலத்திலேயே, குரூப் 1 தேர்வில், காவல் துறையைத் தவறாகத் தேர்ந்தெடுத்து விட்டேன் என்றும், பணியில் பயங்கரமான நெருக்கடிகளால் ஏற்படும் மன உளைச்சல்களைத் தாங்க முடியவில்லை என்றும், அதனால் தற்கொலை முடிவை நாடுவதாகவும் எழுதி வைத்து விட்டு நேற்றைய தினம் வேறு சில அதிகாரிகள் செய்ததைப் போல, தூக்குப் போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
காவல் துறை மீது இதுவரை இல்லாத இப்படிப்பட்ட கடுங் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக அணி வகுத்துவந்து கொண்டிக்கும் நேரத்தில், அதற்கெல்லாம் சிகரம் வைத்ததைப் போல தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மாநிலக் காவல் துறை மீது நம்பிக்கையை இழந்து விட்டதாக வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் வெளிப்படையாகத் தெரிவித்தார் என்று அதிர்ச்சியூட்டும் செய்தி வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்
இதற்கெல்லாம் காவல்துறை பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள முதல்வரின் பதில் என்ன? பேரவையில் 110வது விதியின் கீழ் அதைச் செய்யப் போகிறோம், இதைச் செய்யப் போகிறோம் என்று வானத்தை வில்லாய் வளைக்கப் போகிறோம்; மணலைக் கயிறாய்த் திரிக்கப் போகிறோம் என்பதைப் போன்ற வெற்று அறிவிப்புகள் மட்டும் தானா?" என்று கருணாநிதி தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications