தமிழகத்தில் முதன் முறையாக நெல்லையில் அன்புச் சுவர் திட்டம் தொடக்கம்
நெல்லை: தமிழகத்தில் முதன் முறையாக நெல்லை மாவட்டத்தில் அன்பு சுவர் என்ற புதிய திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. நமக்கு தேவையற்ற பொருட்களை தேவையானவர்களுக்கு வழங்கும் விதமாக, இத்திட்டத்தை அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்.
தேவையற்ற பொருட்களை தேவையானவர்களுக்கு வழங்கும் விதமாக, அன்புச் சுவர் என்ற திட்டம் தமிழகத்தில் முதன் முறையாக நெல்லை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ஆட்சியர் அலுவலக வளாகச் சுவரில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தை தொடக்கி வைத்து பேசிய சந்தீப் நந்தூரி, அன்புச் சுவர் திட்டம் மூலம் பொதுமக்கள் தங்களிடம் உள்ள ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை தேவையானவர்களுக்கு வழங்க முடியும். பொதுமக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications