ஜெ.வுக்கு தந்த உணவே விஷமானதா? மோடி எச்சரிக்கையை மறைமுகமாக உறுதி செய்கிறது அப்பல்லோ
ஜெயலலிதாவுக்கு தந்த மருந்துகளுக்கு எதிரான உணவுதான் விஷமாகிப் போனது என்பதை மறைமுகமாக அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை உறுதி செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை: ஜெயலலிதாவுக்கு தரப்படும் உணவு விஷமாகிவிடும் அபாயம் இருக்கிறது என குஜராத் முதல்வராக இருந்த மோடி 6 எச்சரித்ததைத்தான் அப்பல்லோ மருத்துவமனையின் ரிப்போர்ட் மறைமுகமாக சுட்டிக்காட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா அமோக வெற்றி பெற்று முதல்வரானார். அப்போது ஜெயலலிதாவின் உடல்நலனைப் பாதுகாக்க குஜராத்தில் இருந்து ஒரு நர்ஸை மோடி போயஸ் கார்டனுக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் போயஸ் கார்டனை ஆக்கிரமிருந்தவர்கள் அந்த நர்ஸை தொடக்கம் முதலே விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர். ஒருகட்டத்தில் அவரால் தாக்குப் பிடிக்காமல் குஜராத்துக்குத் திரும்பி போய்விட்டார்.

உணவே நாளை விஷமாகும்..
அங்கு முதல்வராக இருந்த மோடியிடம், ஜெயலலிதாவுக்கு தரப்படும் மருந்துகள் சரியானதாக இருக்கிறது; ஆனால் அதற்கேற்ப உணவுகள் திட்டமிட்டே தரப்படுவதில்லை; எடுக்கப்படும் மருந்துகளுக்கு ஏற்ப உணவுகளைத் தர வேண்டும்; ஆனால் தொடர்ந்து வேண்டுமென்றே மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படும் வகையிலான உணவுகளே தரப்படுகிறது என அந்த நர்ஸ் விவரித்திருக்கிறார். இப்படியான உணவு நாளை விஷமாகி உடல்நலனை கடுமையாக பாதிக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஜெ விசாரணை
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மோடி உடனே ஜெயலலிதாவிடம் இது தொடர்பாக விரிவாக விவரித்து எச்சரிக்கை செய்திருந்தார். இது தொடர்பாக போயஸ் கார்டனில் கடுமையாக நடந்து கொண்டார் ஜெயலலிதா. அத்துடன் நிற்காமல் தமக்கு நம்பிக்கையான உளவுத்துறை மூலமாக தம்மை சுற்றி என்ன நடக்கிறது என கண்காணிக்க சொன்னார்.

விரட்டியடிப்பு
அப்போது ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட தகவல்கள், மோடியின் எச்சரிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இருந்தது. இதனால்தான் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக போயஸ் கார்டனை ஆக்கிரமித்திருந்த 40-க்கும் மேற்பட்டோரை விரட்டியடித்தார் ஜெயலலிதா. அதேபோல் இந்த 40-க்கும் மேற்பட்ட கும்பலை ஆட்டுவித்த நபர்கள் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கினார்.

விசாரணை நடத்தினால்...
மேலும் தமக்கு எதிரான சதிகாரர்கள் யாரென அடையாளம் கண்டு அவர்களை ஓட ஓட விரட்டி சிறையிலடைத்தார் ஜெயலலிதா. இதன் தொடர்ச்சியாகவே சசிகலா மட்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டு மீண்டும் போயஸ் கார்டனுக்குள் வந்தார்; தற்போது அப்பல்லோ அறிக்கை ஜெயலலிதாவுக்கு கடந்த தரப்பட்ட மருந்துகளே பிரச்சனைக்கு காரணம் என்கிறது. ஆகையால் கடந்த மருந்துகள், அதற்கான உணவுகள் குறித்து உரிய விசாரணை நடத்தினால் எல்லா உண்மையும் அம்பலத்துக்கு வரும் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications