செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளிலிருந்து தண்ணீ திறப்பு குறைப்பு.. !
சென்னை: சென்னையிலும், பல புறநகர்ப் பகுதிகளிலும் வெள்ளக்காடாக மாறக் காரணமாக இருந்த செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரியிலிருந்து வெளியாகி வந்த பெருமளவிலான தண்ணீர் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளிலேயே பெரியது செம்பரம்பாக்கம் ஏரிதான். தொடர் மழை காரணமாக இந்த ஏரி முழுமையாக நிரம்பி விட்டது.
இதையடுத்து உபரி நீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 18,000 சென்னைப் புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் நீர் புகுந்து வெள்ளக்காடானது. சென்னையிலும் அடையாறு கரையையொட்டிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

மழை ஓய்ந்ததால் நீர் திறப்பு குறைப்பு
தற்போது மழை விட்டு விட்டதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 10,000 கன அடியிலிருந்து 4,000 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் ஏரியிலிருந்து வினாடிக்கு 18,000 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் வெறும் 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இன்னும் வெளியேறாத தண்ணீர்
இருப்பினும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட உபரி நீரால் கோட்டூர்புரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான வீடுகளுக்குள் தொடர்ந்து தண்ணீர் தேங்கியுள்ளது. இன்னும் வெள்ளம் வெளியேறவில்லை.

நதிக் கரையோரம்
சென்னை அரும்பாக்கம் கூவம் நதிக்கரையில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாமில் தங்கவைக்கப்ட்ட கிருஷ்ணன் என்ற முதியவர் உயிரிழந்ததால் உடன் தங்கிருந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். அடையாறு ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் ஆயிரக்காணக்கான மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.

மிதக்கும் வீடுகள்
கோட்டூர்புரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரத்தி்ல கிட்டத்தட்ட ஆற்றுக்கு உள்ளேயே கட்டப்பட்ட வீடுகள் தொடர்ந்து தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் கோட்டூர்புரம் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு பள்ளிகளில், விளையாட்டு மைதானங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றன.

பூண்டி ஏரி
இதற்கிடையே, பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு 750 கனஅடியாக குறைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து நேற்று 25,000 கனஅடி நீர் திறக்கபப்ட்டது.

கொசஸ்தலை ஆறு
பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட நீர் கொசஸ்தலை ஆற்றில் கலந்தது. கொசஸ்தலை நீரால் மணலி புதுநகர், எழில் நகர், அத்திப்பட்டு புதுநகரில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ள ஆபத்தை குறைக்கும் வகையில் பூண்டியில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications