செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளிலிருந்து தண்ணீ திறப்பு குறைப்பு.. !
சென்னை: சென்னையிலும், பல புறநகர்ப் பகுதிகளிலும் வெள்ளக்காடாக மாறக் காரணமாக இருந்த செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரியிலிருந்து வெளியாகி வந்த பெருமளவிலான தண்ணீர் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளிலேயே பெரியது செம்பரம்பாக்கம் ஏரிதான். தொடர் மழை காரணமாக இந்த ஏரி முழுமையாக நிரம்பி விட்டது.
இதையடுத்து உபரி நீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 18,000 சென்னைப் புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் நீர் புகுந்து வெள்ளக்காடானது. சென்னையிலும் அடையாறு கரையையொட்டிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

மழை ஓய்ந்ததால் நீர் திறப்பு குறைப்பு
தற்போது மழை விட்டு விட்டதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 10,000 கன அடியிலிருந்து 4,000 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் ஏரியிலிருந்து வினாடிக்கு 18,000 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் வெறும் 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இன்னும் வெளியேறாத தண்ணீர்
இருப்பினும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட உபரி நீரால் கோட்டூர்புரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான வீடுகளுக்குள் தொடர்ந்து தண்ணீர் தேங்கியுள்ளது. இன்னும் வெள்ளம் வெளியேறவில்லை.

நதிக் கரையோரம்
சென்னை அரும்பாக்கம் கூவம் நதிக்கரையில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாமில் தங்கவைக்கப்ட்ட கிருஷ்ணன் என்ற முதியவர் உயிரிழந்ததால் உடன் தங்கிருந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். அடையாறு ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் ஆயிரக்காணக்கான மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.

மிதக்கும் வீடுகள்
கோட்டூர்புரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரத்தி்ல கிட்டத்தட்ட ஆற்றுக்கு உள்ளேயே கட்டப்பட்ட வீடுகள் தொடர்ந்து தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் கோட்டூர்புரம் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு பள்ளிகளில், விளையாட்டு மைதானங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றன.

பூண்டி ஏரி
இதற்கிடையே, பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு 750 கனஅடியாக குறைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து நேற்று 25,000 கனஅடி நீர் திறக்கபப்ட்டது.

கொசஸ்தலை ஆறு
பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட நீர் கொசஸ்தலை ஆற்றில் கலந்தது. கொசஸ்தலை நீரால் மணலி புதுநகர், எழில் நகர், அத்திப்பட்டு புதுநகரில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ள ஆபத்தை குறைக்கும் வகையில் பூண்டியில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications