சென்னை மக்களின் தாகம் தீர்க்க கிருஷ்ணா நதி தண்ணீர் திறப்பு
சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்த வினாடிக்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள விஜயவாடா மற்றும் கர்னூல் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் அங்குள்ள ஸ்ரீசைலம் அணையிலிருந்து கடந்த வாரம் கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தற்போது கண்டலேறு அணைக்கு வர தொடங்கி உள்ளது.

இதனால் தமிழக அதிகாரிகள் மீண்டும் ஆந்திர அதிகாரிகளை தொடர்பு கொண்டு பூண்டி அணைக்கு தண்ணீர் திறந்துவிட கேட்டு கொண்டனர். இந்த கோரிக்கையை ஏற்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு தமிழகத்துக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார்.
அதன்படி கண்டலேறு அணையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 200 கன அடி திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நீரானது 177 கிலோ மீட்டர் தூரம் பயணித்து,
தமிழக ஆந்திர எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை "ஜீரோ பாயிண்ட்"டை வந்தடையும். அங்கிருந்து 25 கிலோமீட்டர் பாய்ந்து, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை அடைய உள்ளது. கண்டலேறுவில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர், இரண்டு நாட்களுக்குள்
பூண்டியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கிருஷ்ணா நீர் வரும் சாய் கால்வாயை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications