தமிழகம் முழுவதும் கேன் குடிநீர் நிறுவனங்கள் ஸ்டிரைக் வாபஸ்

தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில், சில நாட்களுக்கு முன்னர் அடைக்கப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் இதுவரை 857 நிறுவனங்கள் குடிநீர் தயாரிக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், தண்ணீர் எடுக்க தடைவிதிக்கப்பட்ட பகுதிகளில் அனுமதி கேட்டல் உள்ளிட்ட காரணங்களுக்காக 252 நிறுவனங்களின் விண்ணப்பங்களை ஏற்க முடியாது எனவும் பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் கேட்ட பசுமைத் தீர்ப்பாயம், அனுமதி கோரி விண்ணப்பித்த 252 கேன் குடிநீர் நிறுவனங்களுக்கு தற்காலிக தடை விதித்தது.
இதனையடுத்து குடிநீர் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை விலக்கக்கோரியும், விதிகளை தளர்த்த வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் 850க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து பரிசீலிப்பதாக தமிழக அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உறுதியளித்துள்ளதால், போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக கேன் குடிநீர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications