’ஓகி’ மழையால் வேகமாக நிரம்பி வரும் நெல்லை அணைகள்... வெள்ளப்பெருக்கு அபாயம்
தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நெல்லை மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
Recommended Video

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு உள்ளது.
தென்மாவட்டங்களில் ஓகி புயலால் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தின் பெரிய அணையான பாபநாசம் அணை மொத்தம் 143 அடி உயரம் கொண்டது. நேற்று வியாழன் காலையில் 107.45 அடியாக அணையின் நீர்மட்டம் இருந்தது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம்
மழை காரணமாக அணைக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 129.10அடியாக ஒரே நாளில் 22 அடி உயர்ந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய மழை திருநெல்வேலியில் பெய்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரில் 5 ஆயிரத்து 765 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
இன்னொரு முக்கிய அணையான சேர்வலாறு அணையில் நேற்று காலையில் நீர்மட்டம் 121 அடியாக இருந்தது. அணைக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்மட்டம் 147 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் உயரம் 156 அடியாக இருந்தாலும், அபாயம் கருதி, 147 அடிக்கு பிறகு வரும் மழைநீர் முழுவதும் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

அதிக அளவில் நீர் வெளியேற்றம்
பாபநாசத்தில் இருந்து 6 ஆயிரம் கன அடி, சேர்வலாறு அணை நீர் 8 ஆயிரம் கனஅடி, கடனாநதியில் இருந்து வெளியேறும் 8 ஆயிரம் கனஅடி நீர், மழை நீர் என மொத்தம் 25 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணியில் வெளியேறுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மூழ்கிய குறுக்குத்துறை கோவில்
நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் இரு பக்கங்களிலும் ஆறு கரை புரண்டு ஓடுகிறது. குறுக்குத்துறை அருகே தாமிரபரணியின் குறுக்காக உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. தாமிரபரணி ஆற்றுக்குள் உள்ள குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் நீரில் மூழ்கி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications