நடப்பாண்டில் 10 சதவீத மதுக்கடைகளை மூடிவிட்டோம்: காலரை தூக்கி சொல்கிறார் கேரள முதல்வர்
சென்னை: தமிழகத்திற்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஒப்பந்தபடி தண்ணீர் வழங்கப்படும் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட மக்கள் முல்லைப்பெரியாறு அணையை நம்பி தான் உள்ளனர். கேரளா மற்றும் தமிழகத்திற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தபடி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து ஒரு லிட்டர் தண்ணீர் கூட குறைக்காமல் வழங்குவோம். தமிழகத்தை சேர்ந்தவர்கள் கேரளாவிலும், கேரளாவை சேர்ந்தவர்கள் தமிழகத்திலும் வசிக்கின்றனர்.

இரு மாநில மக்களும் பாரம்பரியத்துடனும், சகோதரத்துவத்துடனும் வாழ்கின்றனர். இந்த அணை விவகாரத்தில் கேரள மக்களின் பாதுகாப்பும் முக்கியமானது.
கேரளாவில் மதுவிலக்கு கொள்கையில் எந்தவித மாற்றமும் கிடையாது. கடந்த ஆண்டு 10 சதவீத மதுக்கடைகளை மூடியுள்ளோம். நடப்பு ஆண்டில் 10 சதவீத கடைகள் மூடப்பட்டு வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் கேரளாவில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும். இதனால் நிதி இழப்பு உள்பட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஆனாலும் மக்களின் நலன் கருதி இதை செயல்படுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications