இதுபோன்ற மிரட்டல்களை எல்லாம் சிறு வயதிலேயே பார்த்துவிட்டோம்.. அசராத தினகரன்!
இதுபோன்ற மிரட்டல்களை எல்லாம் சிறு வயதிலேயே பார்த்துவிட்டோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: இதுபோன்ற மிரட்டல்களை எல்லாம் சிறு வயதிலேயே பார்த்துவிட்டோம் என வருமான வரித்துறை ரெய்டு குறித்து டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள் வீடு, நண்பர்களின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் என 190க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த ரெய்டால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், மத்திய அரசுதான் இந்த சோதனைக்கு காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அஞ்சப்போவதில்லை..
தங்களை மிரட்டிப்பார்க்கவே இதுபோன்ற சோதனை நடத்தப்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். இதற்கெல்லாம் தாங்கள் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

வீரமிக்க குடும்பம்..
87 வயதான தனது தந்தை முதல் பிறந்த குழந்தை வரை யாருக்கும் பயம் என்பதே கிடையாது என்றும் அவர் கூறினார். வீரமிக்க குடும்பத்திலும் வீரமிக்க மண்ணிலும் பிறந்தவர்கள் தாங்கள் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

பணிய வைக்க முடியாது
30 வயதிலேயே தான், தனது தம்பி, மற்றும் சித்தி ஆகியோர் ஒரு வருடம் ஜெயிலில் இருந்ததாகவும் அவர் கூறினார். தங்களை மிரட்டி மத்திய அரசு பணிய வைக்க முடியாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சிறுவயதிலேயே பார்த்துவிட்டோம்
மேலும் ஜெ ஜெ டிவியை முடக்கியது போன்று ஜெயாடிவியை முடக்க பார்க்கிறார்கள் என்றும் டிடிவி தினகரன் குற்ற்மசாட்டினார். இதுபோன்ற மிரட்டல்களை சிறு வயதிலேயே பார்த்துவிட்டோம் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

பகல் கனவு பலிக்காது
எங்களை அழித்துவிட்டு நீங்கள் வளர முடியாது என்றும் டிடிவி தினகரன் பாஜகவுக்குக்கு எச்சரிக்கை விடுத்தார். பாஜகவின் பகல் கனவு பலிக்காது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications