நாடா புயலை எதிர்கொள்ள தமிழகம் தயார்- வதந்திகளை நம்பாதீர்கள்: அமைச்சர் உதயகுமார்
நாடா புயலை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருப்பதாகவும், புயல் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா புயல் தமிழக கடலோர பகுதிகளில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
ஆலோசனைக்குப் பின்னர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நாடா புயலை எதிர்கொள்ள தமிழகம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

புயல் அதிகம் பாதிக்கும் என்று எதிர்பார்க்கும் மாவட்டங்களில் முகாம்கள் தயாராக உள்ளதாகவும், அங்கு சமையல் கூடங்கள், உணவுப் பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். புயல் பாதுகாப்பு, கண்காணிப்பு மையங்கள் 24 மணிநேரம் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்துறை செயலாளர் சந்திரமோகன், பொதுமக்கள் யாரும் புயல் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம். புயல், மழை குறித்த செய்திகளுக்கு ஊடகங்கள் மக்கள் கவனிக்க வேண்டும் என்று தெரிவித்தார். தமிழக அரசு அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர், பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பதால் அஞ்ச வேண்டாம் என்றும் சந்திரமோகன் கூறினார்.
தீயணைப்பு மீட்பு பணித்துறை அதிகாரிகள், காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்களும் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் வருவாய்துறை செயலர் கூறியுள்ளார். சாலையில் விழும் மரங்களை அப்புறப்படுத்தவும், மக்களை மீட்க படகுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் சந்திர மோகன் கூறியுள்ளார். தொற்றுநோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க பாதுகாப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் தேவையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
நீர் தேங்கும் பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். வெள்ள நீர் தேங்கும் அளவிற்கு தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முகாம்களில் குடியேற வேண்டும் என்றும் சந்திரமோகன் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications