நாமளும் கூட இப்படிச் செய்யலாமே..?
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெயில் காலம் வந்து விட்டது. வெளியில் தலை காட்ட முடியவில்லை. வெளியில் போனவர்களும் கூட தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற கணக்கில் வேகம் வேகமாக வீடுகளுக்கு ஓடி வரும் அளவுக்கு வெயில் வெளுத்து வருகிறது.

ஊரெங்கும் தர்பூசணி, இளநீர், நுங்கு, குளிர்பான விற்பனை களை கட்டி வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் ஒரு வீட்டின் முன்புறம் கண்ட காட்சி இது.
வீட்டுக்கு வெளியே ஒரு உடைந்த மரத்துண்டின் மீது மண்பானை வைத்து அதில் நீர் ஊற்றி, டம்பளர் ஒன்றையும் வைத்துள்ளார் அந்த வீட்டுக்காரர்.
கடும் வெயிலில் வெளியில் உலவுவோர் இங்கு தாக சாந்தி செய்து சற்று இளைப்பாறிக் கொள்ள இது உதவுகிறது.
நாமும் கூட இதை இந்த வெயில் காலத்தில் கடைப்பிடிக்கலாமே....!












Click it and Unblock the Notifications