தோற்றுப் போவீர்கள், போங்கள்.. தா.பா. ஆவேசம்

இதுகுறித்து அவர் கூறுகையில், 2014 நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற, இடதுசாரி கட்சிகள் கோருகின்ற மாற்று ஆட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடைவிடாது முயற்சிக்கும். அதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இதில் தமிழகத்துக்கு சிறப்பான பாத்திரம் வகிக்க கூடிய வாய்ப்பும் உருவாகி இருக்கிறது.
அதிமுக பொதுக்குழுவில் தனித்து போட்டி என்றும், கூட்டணி குறித்து முடிவெடுக்க பொதுச்செயலாளருக்கு அதிகாரம் கொடுத்தும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். எங்கள் கூட்டணி குறித்து அதிமுக பகிரங்கமாக அறிவிக்காததில் எங்களுக்கு எந்த சங்கடமும், வேதனையும் இல்லை. ஏனெனில் அவர்களை நாங்கள் புரிந்து வைத்திருக்கிறோம்.
ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலில் 5 பேரை அதிமுக அறிவித்தது. எங்கள் கோரிக்கையை ஏற்று ஒருவரை வாபஸ் பெற்று, எங்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதுபோல் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கோரிக்கை ஏற்கப்படும்.
எங்களை அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற சிலர் முயற்சிக்கின்றனர். அவர்கள் அந்த முயற்சியிலும் வெற்றி பெற மாட்டார்கள். தேர்தலிலும் வெற்றி பெற மாட்டார்கள் என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications