அதிமுகவில் இருந்து நாங்கள் ஓட வேண்டிய அவசியமில்லை... சசிகலா புஷ்பா ஆவேசம்
அதிமுகவில் இருந்து நாங்கள் ஓட வேண்டிய அவசியமில்லை என அதிமுக எம்பி சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவில் இருந்து நாங்கள் ஓட வேண்டிய அவசியமில்லை என அதிமுக எம்பி சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். மன்னார்குடி கும்பலிடமிருந்து அதிமுகவையும் தமிழகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் அதிமுக எம்பி சசிகலா எம்பி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.
அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவுக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார். தீபா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து தனிக்கட்சி தொடங்குவீர்களா என செய்தியாளர் கேட்டதற்கு இல்லை என்று கூறிய அவர், பிஎச்.பாண்டியன் அவர்கள் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே கட்சியில் இருப்பவர்.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிமட்ட தொண்டர் எனக்கூறியுள்ளார். எனவே நாங்கள் கட்சியை விட்டு ஓட வேண்டிய அவசியமில்லை. கட்சிக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத சசிகலாவும் மன்னார்குடி கும்பல்தான் ஓடவேண்டும்.
மன்னார்குடி கும்பலிடமிருந்து அதிமுகவையும், ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும் என்றும் சசிகலாபுஷ்பா கேட்டுக்கொண்டார்.