ஆளுநர் மீது சந்தேகமில்லை.... இன்று பதவியேற்பு என்று நாங்கள் சொல்லவில்லை - அதிமுக நிர்வாகிகள்
ஆளுநர் மீது எந்த சந்தேகமும் இல்லை, அவரிடம் இருந்து தகவல் வந்த உடன் பதவியேற்பு நடைபெறும் என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: எந்த நேரத்தில் யாரை முதல்வராக்க வேண்டும் என்பது அதிமுகவின் கட்சி கொள்கை முடிவு என்று பன்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். ஆளுநரிடம் இருந்து தகவல் வந்த உடன் பதவியேற்பு நடைபெறும் என்று அதிமுக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கு அக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் போர்கொடி உயர்த்தியுள்ளனர். முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக கூறினார். சசிகலா முதல்வராவதை மக்கள் விரும்பவில்லை என்றும் கூறினார்.

அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுக்களை சசிகலாவிற்கு எதிராக அடுக்கினார் பி.எச். பாண்டியன். இதற்கு பதிலடி தரும் விதமாக சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் பண்ருட்டி ராமசந்திரன், செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தனர்.
பலர் வேண்டுமென்ற வதந்திகளை பரப்புகின்றனர். தங்கள் குறைகளை கட்சி பொதுக்குழுவில் பி.எச்.பாண்டியன் கூறியிருக்கலாம் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், அதிமுகவிற்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாதவர் பி.எச். பாண்டியன் என்று கூறினார். 1996ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது வழக்கு தொடர காரணமாக இருந்தவர் பி.எச்.பாண்டியன் என செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய நிர்வாகிகள், யாரை எந்த நேரத்தில் முதல்வராக்க வேண்டும் என்பது அதிமுகவின் கொள்கை முடிவு என்று கூறினர். ஓ.பன்னீர் செல்வம்தான் சசிகலாவின் பெயரை முன் மொழிந்தவர் என்றும் கூறினார். சசிகலா முதல்வராக இன்று பதவியேற்பார் என்று கட்சி சார்பாக நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேயில்லை என்றும் கூறினார். ஆளுநர் மீது சந்தேகமில்லை என்றும், ஆளுநரிடம் இருந்து தகவல் வந்த உடன் பதவியேற்பு விழா நடைபெறும் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் ஆகியோர் கூறினர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications