காங்கிரஸுடன் திமுக கூட்டணி இல்லை: காங்கிரஸின் சுமை நீங்கிவிட்டது: சொல்கிறார் ஈவிகேஎஸ்

சென்னையில் திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திமுக தலைவர் கருணாநிதி இப்போது போன்று இதற்கு முன்பும் காங்கிரஸை குறை கூறியுள்ளார். ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய காங்கிரஸ் அரசு மட்டுமே உருப்படியான நல்ல காரியங்களை செய்து கொண்டிருக்கிறது. இப்போது காங்கிரஸை குறை கூறும் கருணாநிதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகளின் எம்.பி. பதவிக்காக டெல்லி சென்று காங்கிரஸின் ஆதரவை நாடியது ஏன்?
பதவிக்காக யார் காலிலும் எப்பொழுது வேண்டும் என்றாலும் விழ தயாராக இருப்பவர் கருணாநிதி. சுயநலத்தோடு குடும்பத்திற்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரின் கூட்டணி குறித்த அறிவிப்பு எங்களுக்கு பெரிய நிம்மதியை அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சுமை நீங்கிவிட்டது என்று நினைக்கிறோம். அவர்களால் எங்களுக்கு ஏற்பட்ட கறைகள் நீக்கப்பட்டுவிட்டதாக கருதுகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications