தமிழகத்தில் 356 சட்டப் பிரிவை அமுல்படுத்த மாட்டோம்... தட்டிக்கொடுக்கும் வெங்கய்யா நாயுடு: வீடியோ
தமிழகத்தில் ஒருபோதும் அரசியலமைப்புச் சட்டம் 356ப் பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர மாட்டோம் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஒருநாளும் 356 சட்டப் பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்கும் எண்ணம் இல்லை என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு திட்டவட்டமாகக் கூறினார்.
தமிழகத்தில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்து வரும் ஆட்சியை மத்திய அரசுதான் மறைமுகமாக நடத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு அனைத்துத் தரப்பு மக்களிடம் இருந்தும் வெளிப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இதற்கு அவ்வபோது பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர், புறவாசல் வழியாக வர வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என பதில் அளித்து வருகின்றனர்.
இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தமிழகம் கலவர பூமியாக மாறும் என்று கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழக ஆட்சி பாஜகவின் கையில் உள்ள பந்து என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று சென்னையில் நடந்த ஜிஎஸ்டி விளக்கக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ஜிஎஸ்டியால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என கூறினார்.
அதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்யா நாயுடு, காங்கிரஸ் கட்சி ஜிஎஸ்டி விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்றவர், ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் ஏண்ணம் இல்லை. குறிப்பாக 356 சட்டப்பிரிவைப் பயன்படுத்தும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார்.
ஆனால், மத்திய அரசு சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது. நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என சொல்லி, மக்கள் போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் வாபஸ் வாங்கியது. ஆனால், வாக்குக் கொடுத்த சில நாட்களுக்குள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமுல்படுத்தும் ஒப்பந்தத்தை ஒரு தனியார் கம்பெனிக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications