மாடுபிடி வீரர்களுக்கு நடிகர் அரவிந்த் சாமி அட்வைஸ் !
சென்னை: அலங்காநல்லூரில் இன்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடைபெற வேண்டும் என நடிகர் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிரந்தரமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு ஊர்களில் அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களின் உணர்வுபூர்வமான போராட்டத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் நேற்று பிறப்பித்தார். இதையடுத்து அலங்காநல்லூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.

இந்நிலையில் இன்று நடக்கவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற வேண்டும் என நடிகர் அரவிந்த் சாமி கருத்து தெரிவித்துள்ளார்."நாம் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தும் போது, அதனை பார்க்க வரும் பார்வையாளர்களும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களும் பாதுகாப்பாக இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
While V celebrate, V need 2 take steps 2 ensure that d audience, the players r safe & d bulls r not harmed if #jallikattu is 2 be sustained
— arvind swami (@thearvindswami) January 21, 2017
மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் துன்புறுத்தப்படாதவாறு நாம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்."என தனது டிவிட்டர் பக்கத்தில் அரவிந்த் சாமி அறிவுறுத்தியுள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications