முதல்வராக வேண்டும் சகாயம்... பேஸ்புக்கில் புது பரபரப்பு!
சென்னை: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் முதல்வராக வேண்டும் என்ற பெயரில் பேஸ்புக்கில் ஒரு பக்கம் திறக்கப்பட்டுள்ளது.
அதில் சகாயம் குறித்த அருமை பெருமைகளைக் குறிப்பிட்டுள்ளதோடு அவர் குறித்த செய்திகளையும் போட்டு வருகின்றனர்.
லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து என்ற குறிக்கோளுடன் வாழ்ந்து வரும் சகாயம்தான் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்பது இந்த பேஸ்புக் பக்கத்தின் இலக்காகும்.

செப்டம்பர் 27 முதல்
செப்டம்பர் 27ம் தேதி இந்த பக்கம் திறக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா ஜெயிலுக்குப் போன நாளன்று
அதாவது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறைக்குப் போன நாளன்று இந்தப் பக்கத்தைத் திறந்துள்ளனர்.

சகாயம் பெயரைக் கேட்டாலே கசாயம் குடித்தது போல
இதில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், சகாயம் பெயரைக் கேட்டாலே ஊழல்வாதிகளுக்கு கசாயம் குடித்தது போல இருக்கிறது என்று எழுதியுள்ளார்.

மக்கள் சேவகரே
ஒரு ஆட்டோவின் பின்புறம் சகாயத்தை மக்கள் சேவகர் என்று விளித்து அவரை வாழ்த்தி வைக்கப்பட்டுள்ள பேனர் குறித்த படமும் இதில் இடம் பெற்றுள்ளது.

ஆயிரக்கணக்கில் லைக்ஸ்
இந்தப் பக்கத்திற்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் கொடுத்துள்ளனர். சகாயம் குறித்த செய்திகள், படங்களுடன் இந்தப் பக்கம் தற்போது பேஸ்புக்கில் பிரபலமாகி வருகிறது.












Click it and Unblock the Notifications