காவிரி: தொடர்ந்து மவுனம் காத்தால்.. மோடி வீட்டை முற்றுகையிடுவோம்.. பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை
சென்னை: காவிரி பிரச்சனையில் பிரதமர் தொடர்ந்து மவுனம் காத்தால் பிரதமர் இல்லம் முன் போராட்டம் நடத்துவோம் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தயங்குமேயானால், விவசாயிகள் ஒன்று சேர்ந்து சதானந்த கவுடா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பிரதமர் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். காவிரி விவகாரத்தில் பிரதமர் இனியும் தொடர்ந்து மவுனமாகவே இருந்தால் அனைத்து கட்சி தலைவர்களுடன் விவசாயிகள் சென்று, அவர் வீட்டு முன் போராட்டம் நடத்துவார்கள் என்றும் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

நீர் பாசன அமைச்சர் மற்றும் ஆணையத் தலைவருக்கு மிரட்டல் விடுத்த சதானந்த கவுடாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறினார். அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் சதானந்த கவுடா, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தயங்குமேயானால், விவசாயிகள் ஒன்று சேர்ந்து சதானந்த கவுடா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பு படி வரும் 27ம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இப்பிரச்சனையில் கர்நாடகாவின் முடிவு உச்சநீதிமன்ற தீர்ப்பை கட்டுப்படுத்தாது என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications