தமிழகம் வந்தால் ஆந்திர முதல்வர் நாயுடு மீது தாக்குதல்: தமிழ் மக்கள் விடுதலை புலிகள் எச்சரிக்கை
சென்னை: 20 தமிழரை படுகொலை செய்ய உத்தரவிட்ட ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகம் வந்தால் அவர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பதி அருகே 20 தமிழரை ஆந்திரா காவல்துறை திட்டமிட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாள்தோறும் பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்கள் நீதி கோரி கண்டனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்தினர், தமிழரைப் படுகொலை செய்த ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தமிழகம் வந்தால் அவர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள தெலுங்கர்கள் மற்றும் அவர்களது நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்துவோம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications