இதைவிட பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு: சிவாஜி விழா குறித்து கமல்!
இதைவிட பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு என சிவாஜி விழா குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: இதைவிட பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு என சிவாஜி விழா குறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் சென்னை அடையாறில் நேற்று திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதனை திறந்து வைத்தார்.

அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாபா பாண்டியராஜன், மற்றும் சட்டசபை உறுப்பினர்கள், நடிகர்கள் ரஜினி காந்த், கமல் ஹாசன், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல், துணை துணை முதல்வர் என குறிப்பிடாமல் பொதுவாக அமைச்சர் பெருமக்களே என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், சிவாஜி கணேசனை எந்த அரசாக இருந்தாலும் மதிக்க வேண்டும். கெஞ்ச வேண்டிய தேவையில்லை என்றார்.
இந்நிலையில் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் திறப்பு விழா குறித்து அவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் செவாலியே சிவாஜிமணிமண்டப விழா இனிதே நடந்தேறியது. இது போலவும் இதைவிடப்பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு என்று கூறியுள்ளார்.
செவாலியே சிவாஜிமணிமண்டப விழா இனிதே நடந்தேறியது. இது போலவும் இதைவிடப்பெரியதும் செய்வோம் எங்கள் அய்யாவிற்கு.
— Kamal Haasan (@ikamalhaasan) October 1, 2017












Click it and Unblock the Notifications