Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3வது அணியாக மக்கள் நலனுக்கான இயக்கம்- தே.மு.தி.க., த.மா.காவுடன் பேச்சுவார்த்தை: ஜி. ராமகிருஷ்ணன்!!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் தமிழக சட்டசபை தேர்தலுக்கான 3வது அணியாக மாறும்; இந்த அணியில் தே.மு.தி.க, த.மா.காவை இணைக்க பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வ.உ. சிதம்பரனார் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்.அவரது லட்சியத்தை நிறைவேற்ற பாடுபட வேண்டும். மத்திய மாநில அரசுகளின் தவறான கொள்கையால் விலைவாசி உயர்ந்து விட்டது. வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை அதிகரித்து தனியார் மயமாக்குவதை கண்டித்து கடந்த 2-ந்தேதி நடைபெற்ற பொது வேலை நிறுத்த போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

We will emerge Thrid fron in TN: G Ramakrishnan

மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை வாபஸ் பெற்றதும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் உள்பட 5 கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டு இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.

15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலில் இந்த இயக்கம் 3-வது அணியாக மாறும். தே.மு.தி.க., த.மா.கா.வை சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவோம்.

தற்போது தமிழகத்தில் நடந்து வரும் தவறுகளுக்கு தி.மு.க. - அ.தி.மு.க.தான் காரணம். மதுவிலக்கு போராட்டத்தை யாரும் கைவிடவில்லை. மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சட்டமன்றத்தில் வலியுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+