அன்னிய நாடுகளின் ஊருவல் சவால்களை வெல்வோம்: தென்பிராந்திய ராணுவ தளபதி ஜக்பீர்சிங்
சென்னை: அன்னிய நாடுகளின் ஊருவல் சவால்களை வெல்வோம் என்று தென்பிராந்திய ராணுவ தளபதி ஜக்பீர்சிங் தெரிவித்துள்ளார்.
கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டுகளும் கார்கில் வெற்றி நாளான ஜூலை 26 அன்று அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி 15 ஆவது கார்கில் வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதில் சென்னையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தென்பிராந்திய ராணுவ தளபதியான ஜக்பீர் சிங் கலந்துகொண்டு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வின் போது பேசிய தென்பிராந்திய ராணுவத் தளபதி ஜக்பீர் சிங், கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்று வரலாற்றில் இடம் பெற்றது. இப்போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் உயிர்த்தியாகத்தை போற்றும் வகையிலும், வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.
இந்திய எல்லையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஊடுருவல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தகைய சவால்கள் வந்தாலும் இந்திய வீரர்கள் எதிர்த்து நின்று வெற்றியை நமக்கு உரியதாக்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications