ஓ.பி.எஸ். எப்போது வந்தாலும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்: சி.வி.சண்முகம்
அதிமுகவின் இரு அணிகளும் இணையவதற்கு பேச்சுவார்த்தை நடத்த ஓபிஎஸ் எப்போது வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணையப் போவதாக பல்வேறு தகவல் வெளியான நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திலும் இன்று இரவு மிக முக்கியமான ஆலோசனை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அமைச்சர் ஜெயக்குமார், ஆலோசனைக் கூட்டம் பற்றி விளக்கினார். இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், ஓ.பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் நாங்கள் பேசத் தயாராக உள்ளோம் என்றும், எம்.எல்.ஏ., வெற்றிவேல் கூறுவது கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே தினகரனுக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரின் ஒட்டுமொத்த முடிவைதான் ஜெயக்குமார் கூறினார் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications