எங்களுக்கு 160 சீட் கிடைக்கும்... ஜெ. அதிர்ச்சி அடைந்துள்ளார்..: விஜயகாந்த்
திருவாரூர்: மத்திய உளவுத்துறையின் கருத்துக் கணிப்புப் படி தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக்கூட்டாணிக்கு 160 இடங்களில் வெற்றி கிடைக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளது. இந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனால், மக்கள் நலக்கூட்டணி மற்றும் தேமுதிக, தமாகா வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்தும், அவரது மனைவியும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய உளவுத்துறை அறிக்கை...
அதன்படி, தர்மபுரியில் பிரேமலதா மேற்கொண்ட பிரச்சாரத்தில், ‘மத்திய உளவுத்துறையின் அறிக்கை ஒன்று எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில், ‘தமிழகத்தில் 130 முதல் 160 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் முதல்வராவதும் கூட்டணி தலைவர்கள் அமைச்சர்கள் ஆவதும் உறுதி. இந்த கூட்டணி தமிழகத்தில் லஞ்சம், ஊழலற்ற ஆட்சியை தரப்போகிறது' என அதிரடியாகத் தெரிவித்திருந்தார்.

குழப்பம்...
மத்திய உளவுத்துறை எப்போது கருத்துக்கணிப்பு நடத்தியது. அது எப்படி தேமுதிகவிற்கு மட்டும் கிடைத்தது என மற்ற கட்சிகள் யோசித்து, குழம்பிக் கொண்டிருக்கும் வேளையில், பிரேமலதாவின் பேச்சை உண்மை என்பது போல, மீண்டும் வழிமொழிந்திருக்கிறார் விஜயகாந்த்.

அண்டப் புளுகு... ஆகாச புளுகு
இது குறித்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் கூறுகையில், "முதல்வர் ஜெயலலிதா, ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்றவர். ஜெயலலிதா அண்ட புளுகு என்றால், கருணாநிதி ஆகாச புளுகு.

கோபம் இருக்கும் இடத்தில் குணம்...
காமராஜர்படிக்கச் சொன்னார். ஜெயலலிதா, மக்களை குடிக்கச் சொல்கிறார். விஜயகாந்த் அடிக்கிறார் என்று கூறுகின்றனர். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும். கட்சிக்காரர்கள் தவறு செய்யும்போது, அதை தட்டிக் கேட்கிறேன்.

160 இடங்கள்...
மத்திய உளவுத் துறை கருத்துக்கணிப்பு, தே.மு.தி.க., மற்றும் மக்கள் நலக் கூட்டணிக்கு, 160 இடங்கள் கிடைக்கும் என, தெரிவித்துள்ளது.

ஜெ. அதிர்ச்சி...
மேலும், அந்தக் கருத்துக்கணிப்பில் அ.தி.மு.க.,வுக்கு, 50 இடங்களும், தி.மு.க.,வுக்கு, 25க்கும் குறைவான இடங்களுமே கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இதனால், ஜெயலலிதா அதிர்ச்சி அடைந்துள்ளார். கட்சியினர் கருத்துக் கணிப்பை நம்பியுள்ளனர். என் கணிப்பு, தமிழ் மக்கள் தான்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications