முலாயம், அகிலேஷ் யாதவ் வந்தால் பேரலை உருவாகுமாம்!
திருச்சி: தமிழகத்தில் சமாஜ்வாடிகட்சியின் வேட்பாளர்கள் சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என சமாஜ்வாதி கட்சி தலைவர் கூறியுள்ளார்.
பிரசாரத்திற்காக முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் தமிழகம் வரும் போது பேரலை உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் இளங்கோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:
எங்கள் கட்சியை தேசிய அளவில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எங்கள் கட்சி 60 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகத்திற்கு முலாயம் சிங்யாதவும், முதல்வர் அபிலேஷ் யாதவும் வருகின்றனர். அவர்கள் தமிழகத்தில் 8 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
எங்கள் கட்சியின் தேசிய தேர்தல் அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. தமிழகத்தில் விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளோம்.
முலாயமும், அகிலேஷ் யாதவும் தமிழகம் வரும் போது தமிழகத்தில் பேரலை ஏற்பட உள்ளது. அப்போது எங்கள் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் குறைந்த பட்சம் சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றார்.
அப்போது, திடீரென கூட்டத்தில் எழுந்த திருச்சி வேட்பாளர் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது என்றார்.
இதைக் கேட்ட செய்தியாளர்கள் எல்லாம் அப்பா... இப்பவே... கண்ணை கட்டுதே சாமி என தலைதெரிக்க அந்த இடத்தை விட்டு காலி செய்தனர்.












Click it and Unblock the Notifications