ஆர்கே நகர் பணப்பட்டுவாடா விவாகரத்தில் வழக்கு பதியப்பட்டதா.. ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து வழக்குப் பதியப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக சட்டசபையில் ஸ்டாலின் எழுப்பினார்.
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து வழக்குப் பதியப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக சட்டசபையில் இன்று எழுப்பினார்.
தொடர்ந்து மு.க. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பேச அனுமதி மறுத்த நிலையில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து சட்டசபையில் இன்று திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அதன் மீது பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து வழக்குப் பதியப்பட்டதா? என்று கேட்டார்.
மேலும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். அவரைத் தொடர்ந்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதனை அடுத்து திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் தரப்பில் இருந்து எதிர்க் குரல்கள் எழும்பின. இதனையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
முடிவில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
-
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications