ஆர்கே நகர் பணப்பட்டுவாடா விவாகரத்தில் வழக்கு பதியப்பட்டதா.. ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து வழக்குப் பதியப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக சட்டசபையில் ஸ்டாலின் எழுப்பினார்.
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து வழக்குப் பதியப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக சட்டசபையில் இன்று எழுப்பினார்.
தொடர்ந்து மு.க. ஸ்டாலினுக்கு சபாநாயகர் பேச அனுமதி மறுத்த நிலையில் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து சட்டசபையில் இன்று திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அதன் மீது பேசிய மு.க.ஸ்டாலின், தேர்தல் ஆணைய உத்தரவுப்படி ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா குறித்து வழக்குப் பதியப்பட்டதா? என்று கேட்டார்.
மேலும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார். அவரைத் தொடர்ந்து பேச சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதனை அடுத்து திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் தொடர்ந்து பேச அனுமதிக்க வேண்டும் என்று குரல் கொடுத்தனர். அதற்கு அதிமுக எம்எல்ஏக்கள் தரப்பில் இருந்து எதிர்க் குரல்கள் எழும்பின. இதனையடுத்து அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
முடிவில் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications