காவேரி மருத்துவமனையின் 5 அறிக்கைகள் சொன்னது என்ன? கடைசி அறிக்கை கவலைப்படுத்துவது ஏன்?
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை தொடர்பாக இதுவரை 6 அறிக்கைகளை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 27ம் தேதி நள்ளிரவில், கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து 28ம் தேதி, அதிகாலை 2.30 மணிக்கு காவேரி மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், "திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த குறைவு காரணமாக கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜூலை 28ம் தேதி இரவு 8 மணிக்கு 2வது அறிக்கை: கருணாநிதியின் உடல்நிலை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளது.
ஜூலை, 29ம் தேதி இரவு 9.50க்கு 3வது அறிக்கை: கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை சீராகி வருகிறது.
ஜூலை, 31ம் தேதி, மாலை 6.30 மணிக்கு 4வது அறிக்கை: கருணாநிதியின் கல்லீரல் தொற்று தொடர்பாக சிகிச்சையளிக்க வேண்டியுள்ளது. வயது முதிர்வின் காரணமாக மேலும் சில நாட்கள், அவர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டும்.
ஆகஸ்ட் 6ம் தேதி, இரவு 6.30 மணிக்கு 5வது அறிக்கை: கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக மாறியுள்ளது. 24 மணி நேரத்திற்கு மருத்துவ உதவிகளுக்கு அவர் உடல் தரும் ஒத்துழைப்பை வைத்தே உடல்நிலை குறித்து கூற முடியும்.
இவ்வாறு 5 அறிக்கைகளும் கூறியுள்ளன. இதில் 5வது அறிக்கை மட்டுமே, கவலை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது கவனிக்கத்தக்கது. ஏனெனில் அதில்தான், மருத்துவர்கள் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளனர்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications