குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டலையாமே: 'குஷ்பு' சொல்கிறார்
சென்னை: டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பு.
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி நடிகை குஷ்பு டெல்லியில் பிரச்சாரம் செய்தார். இன்று டெல்லி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
வாழ்த்துக்கள்
டெல்லி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்கள் உங்களை நம்புகிறார்கள். சிறப்பாக செயலாற்றுங்கள்.
|
தோல்வி
நாங்கள் தோற்றுவிட்டோம். அதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் காங்கிரஸ் போன்று பழமையான கட்சியை அழித்துவிட முடியாது. கிண்டல் செய்பவர்கள் செய்யத் தான் செய்வார்கள். அவர்களுக்கு வேறு வேலை இல்லை.
|
ஒப்புக் கொள்தல்
தோல்வியை ஒப்புக் கொண்டு வெற்றி பெற்றவரை வாழ்த்துவது முடிவை மதித்து ஏற்கும் அடக்கமும், தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள அறிவும் உள்ளதை காண்பிக்கிறது.
|
தேர்தல் கருத்துக்கணிப்பு
தற்போது தேர்தல் கருத்துக்கணிப்புகள் என்ன சொல்லப் போகிறது என்று வியக்கிறேன் என குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications