கர்நாடக ஆளுநர் மீது திடீரென பாய்ந்த ரஜினி...!
கர்நாடக அரசியல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டுள்ளது, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு தலைவணங்குகிறேன் என்று ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கர்நாடக அரசியல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டுள்ளது, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு தலைவணங்குகிறேன் என்று ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மகளிர் உறுப்பினர்களுடன் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தினார். இதில் சில முக்கியமான விஷயங்கள் குறித்து வர ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்கள் மத்தியில் வரவேற்புள்ளது. எங்கள் கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நாடுதான் முன்னேறும். இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை தயார் செய்ய இருக்கிறோம்.
கமலுடன் கூட்டணி வைப்பது குறித்து இப்போது யோசிக்கவில்லை. கட்சி தொடங்கும் போது கமலுடன் கூட்டணி குறித்து யோசிக்கலாம். கட்சியே இன்னும் தொடங்கவில்லை கூட்டணி வைப்பது குறித்து பின்பு பேசலாம்.
கர்நாடக விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. எடியூரப்பாவிற்கு ஆளுநர் 15 நாள் அவகாசம் கொடுத்தது மிகவும் தவறானது. உச்ச நீதிமன்றம் அதை மாற்றியுள்ளது.உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு தலைவணங்குகிறேன்.
மெரினாவில் நடக்கவுள்ள நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல் துறை தடை விதிக்காது. ஈழம் குறித்த நினைவேந்தலுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால்ஏதாவது காரணம் இருக்கும்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும். மஜத- காங்கிரஸ் தலைமையிலான புதிய கர்நாடக அரசு காவிரி தீர்ப்பை மதிக்க வேண்டும். காவிரி தீர்ப்பை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ரஜினி பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications