வெட வெடக்க வைத்த வெள்ளி இரவு.. 11 மணி முதல் 3 மணி வரை பரபரப்பாக காணப்பட்ட கோபாலபுரம்!
கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Recommended Video

சென்னை: கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கோபாலபுரமும் ஆழ்வார்பேட்டையும் பரபரப்பாகியது.

கருணாநிதிக்கு காய்ச்சல் மற்றும் நோய்தொற்று காரணமாக உடல்நலம் கடந்த 24-ஆம் தேதி பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்றைய தினம் அவருக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல்களை பார்ப்போம்.

இரவு 11 மணி- கருணாநிதி நன்றாக உள்ளதாக துரைமுருகன் அறிவிப்பு
12.00 மணி- கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைந்தது
12.10 மணி- ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து கோபாலபுரம் வந்தார் ஸ்டாலின்
12.20 மணி- கோபாலபுரத்துக்கு அழகிரியும் வருகை
12.30 மணி- ஆ.ராசா வந்தார்
12.45 மணி- சிஐடி காலனியிலிருந்து கனிமொழி மற்றும் ராசாத்தியம்மாள், துரைமுருகன் ஆகியோர் வருகை
நள்ளிரவு 1 மணி- கோபாலபுரத்தில் தொண்டர்கள் குவிந்தனர்
1.10 மணி- காவேரி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் கோபாலபுரத்துக்கு வந்தது
1.15 மணி- ஆம்புலன்ஸ் மீது ஏறி தொண்டர்கள் கலைஞர் வாழ்க என கோஷம்
1.20 மணி- ஆம்புலன்ஸ் வாகனத்தில் கருணாநிதி ஏற்றப்பட்டார்
1.25 மணி- காவேரி மருத்துவமனையை ஆம்புலன்ஸ் வாகனம் அடைந்தது
1.30 மணி- தொண்டர்கள் குவிந்தனர்
1.40 மணி- ஸ்டாலின், துரைமுருகன் காவேரி மருத்துவமனைக்கு வருகை
2.15 மணி- மருத்துவமனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு
2.40 மணி- திருமாவளவன், திருநாவுக்கரசர் மருத்துவமனைக்கு வருகை
3.00 மணி-கருணாநிதியின் உடல்நலம் சீரானது












Click it and Unblock the Notifications