சென்னையில் உள்ள சொந்த பந்தங்கள் நிலை.. கவலையில் வெளிமாவட்டத்தினர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் உறவினர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் வெளிமாவட்டங்களில் வசிக்கும் மக்கள் கவலையில் உள்ளனர்.

What happened to our people in Chennai?: Relatives worry

கடந்த 1ம் தேதி பெய்த பேய் மழையால் சென்னை வெள்ளக்காடாகியுள்ளது. புறநகர் பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் மொட்டை மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

வெள்ளமாக இருப்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்க பெரும்பாலான இடங்களில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் செல்போனை சார்ஜ் செய்ய முடியாமல் அது சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. மேலும் வெள்ளத்தால் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பிற மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் சென்னையில் உள்ள தங்களின் உறவினர்களின் நிலை பற்றி தெரிந்துகொள்ள முடியாமல் கவலையில் உள்ளனர்.

தங்கள் சொந்தங்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது என்று தெரிந்தும் இரவு, பகலாக மீண்டும் மீண்டும் அந்த எண்களுக்கு பிற மாவட்ட மக்கள் போன் செய்து வருகிறார்கள். எண்களை டயல் செய்துவிட்டு பிக்கப் பிக்கப் என்று பலர் கூறுவதை கேட்கையில் பரிதாபமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+