ஜார்ஜை விடாமல் துரத்தும் குட்கா ஊழல் வழக்கு.. அரசின் பினாமிகளை குறி வைக்கும் சிபிஐ!
சென்னை: குட்கா ஊழல் வழக்கு விவகாரத்தில் அதன் அதிபர் மாதவராவிடம் நடத்திய விசாரணையில் சிபிஐ அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்று வருகிறது.
அதிமுக அரசில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியவைகளில் குட்கா ஊழல் வழக்கும் ஒன்று. அந்த வழக்கு தற்போது சூடு பிடித்து வருகிறது. வழக்கு கடந்து வந்த பாதை குறித்தும் பினாமிகளை சிபிஐ குறிவைப்பது குறித்தும் தற்போது பார்ப்போம்.
கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில் உள்ள தொழிலதிபர் மாதவராவுக்கு சொந்தமான குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மாதவராவின் ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

கடிதம்
அந்த டைரியில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை அமைச்சர்கள் முதல் உயர் காவல் துறை அதிகாரிகள் வரை யார் யாருக்கு எவ்வளவு பணம் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் இருந்தது. இதனை வைத்து லஞ்சம் வாங்கிய காவல் துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருமான வரித் துறை தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால் அந்த கடிதம் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.

துருவி துருவி கேள்விகள்
இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதை தொடர்ந்து இந்த வழக்கானது சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி சென்னை குட்கா தொழிலதிபர் மாதவராவிடம் சென்னை சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் கடந்த புதன்கிழமை விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது தடையின்றி குட்கா வியாபாரம் நடக்க யார் லஞ்சம் கேட்டது, தமிழக அரசுக்கு தெரிந்துதான் நடந்ததா? இந்த வழக்கில் சுகாதாரத் துறையின் பங்கு என்ன? இதற்கு முகவராக இருந்து செயல்பட்டது யார்? என்பன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

பட்டியல்
மாதவராவிடம் சுமார் 10 மணி நேரம் நடந்த தொடர் விசாரணையில் கிடைத்த தகவலையடுத்து அதிரடியாக நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் மாதவராவுக்கு சொந்தமான செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு கிராமத்தில் உள்ள குட்கா குடோனை பூட்டி சீல் வைத்தனர். இந்த விசாரணையின் போது யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியலையும் அவர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ரெய்டு
இதன் அடிப்படையில் இன்றைய தினம் சென்னையில் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா, இன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது. மாதவராவின் டைரியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை காவல்துறை ஆணை யராக அன்றைய காலகட்டத்தில் இருந்த இப்போதைய டிஜிபி டி.கே. ராஜேந்திரன், ஓய்வுபெற்ற டிஜிபி எஸ்.ஜார்ஜ் உட்பட காவல்துறையைச் சேர்ந்த 23 அதிகாரிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications