தமிழக நதிகளை நாசமாக்கிவிட்டு காவிரி நீருக்காக கர்நாடகாவிடம் கையேந்துகிறோம் #TNNeedsKaveri
சென்னை: நதிகளை பாழடித்து விட்டு காவிரி தண்ணீருக்காக கையேந்துவது நியாயமா? என்று கேட்டு புட் சட்னி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.
நாட்டு நடப்பை அடிப்படையாகக் கொண்டு பல குறும்பு விடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டு வரும் 'புட் சட்னி' சேனல், அவ்வப்போது சில விழிப்புணர்வு வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள காவிரி நதி பற்றிய விழிப்புணர்வு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவில் தமிழகத்தில் ஓடும் வற்றாத ஜீவ நதிகளை எப்படி கொலை செய்திருக்கிறோம். வீடுகளில் தண்ணீரை எப்படி வீணாக்குகிறோம் என்று கூறும் தொகுப்பாளர், மணலை அள்ளி நதிகளை நாசமாக்கிவிட்டதாக கூறியுள்ளார்.
கனத்த இதயத்தோடு காவிரி நீரை தருகிறது கர்நாடகா. அந்த தண்ணீர் தமிழக விவசாயிகளுக்கு சரியாக பங்கிடப்படுகிறதா? எல்லாமே அரசியல் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.