'இரட்டைப் புறா' சின்னத்தில் போட்டியிட்டு 'சேவல்' ஜெயலலிதாவிடம் தோற்ற வெண்ணிற ஆடை நிர்மலா!
சென்னை: எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர், அதிமுக உடைந்து, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாகப் பிரிந்து, சட்டசபைத் தேர்தல் களத்தைச் சந்தித்தபோது, ஜானகி அணி சார்பில் இரட்டைப் புறா சின்னத்தில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டவர் வெண்ணிற ஆடை நிர்மலா.
அவர் எதிர்த்துப் போட்டியிட்டது, ஜெயலலிதாவை. சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா அபார வெற்றி பெற்றார். நிர்மலா 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டை இழந்தார்.
இந்தத் தேர்தலுக்குப் பின்னர் எம்.ஜி.ஆரி.ன் மனைவி ஜானகி, தனது அணியைக் கலைத்தார், ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு அரசியலை விட்டும் ஒதுங்கிக் கொண்டார்.

89ல் வந்த தேர்தல்
எம்.ஜி.ஆர். மறைந்த பின்னர் அதிமுக உடைந்தது. ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் இன்னொரு அணியுமாக உடைந்தது.

ஜானகி அணியில் திருநாவுக்கரசு -பிஎச் பாண்டியன்
இதில் ஜானகி அணியில், சீனியர் தலைவர்கள் மற்றும் அப்போதைய சபாநாயகரான பி.எச்.பாண்டியன் ஆகியோர் இடம் பெற்றனர்.

ஜெயலலிதா பக்கம் திருநாவுக்கரசு - கேகேஎஸ்எஸ்ஆர்ஆர்
ஜெயலலிதா பக்கம் திருநாவுக்கரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் வந்து நின்றனர்.

89ல் வந்த தேர்தல்
இதையடுத்து 1989ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வந்தது. அதில் இரு அணியினரும் போட்டியிட்டனர். ஆனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.

ஜெ.வுக்கு சேவல்.. ஜானகிக்கு இரட்டைப் புறா
இதில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு சேவல் சின்னம் தரப்பட்டது. ஜானகி அணியினருக்கு இரட்டைப் புறா கிடைத்தது.

சிவாஜியுன் கூட்டணி...
ஜானகி அணி அத்தேர்தலில் சிவாஜி கணேசன் தொடங்கிய தமிழக முன்னேற்ற முன்னணியுடன் கூட்டணி வைத்தது. ஜெயலலிதா கம்யூனிஸ்டுகளுடன் இணைந்தார்.

திமுக பலமான கூட்டணி
மறுபக்கம் திமுக பலமான கூட்டணியை அமைத்து தேர்தலைச் சந்தித்தது.

13 வருடத்திற்குப் பிறகு திமுக ஆட்சி
இந்தத் தேர்தலில் திமுக பெரும் வெற்றியைப் பெற்றது. எம்.ஜிஆர். இருந்தவரை ஆட்சியைப் பிடிக்க முடியாமல் அவதிப்பட்ட திமுக, 13 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றியது. அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்தது.

வாரிசாக உருவெடுத்தார் ஜெயலலிதா
இந்தத் தேர்தலின்போது எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசு தான்தான் என்பதை ஜெயலலிதா நிரூபித்தார். அவரது கட்சிக்கு 27 இடங்களில் வெற்றி கிடைத்தது. ஜானகி அணி சார்பில் பி.எச்.பாண்டியன் மட்டுமே வென்றார்.

ஜானகி தோற்றார்
இத்தேர்தலில் ஜானகி ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டார். எம்.ஜி.ஆர். தொகுதி என்ற போதிலும் அவரால் 3வது இடத்தைத்தான் பெற முடிந்தது. எம்.ஜிஆரை ஏற்ற மக்கள் அவரது மனைவியைக் கைவிட்டார்கள்.

போடியில் அபாரமாக வென்ற ஜெயலலிதா
ஆனால் ஜெயலலிதாவோ, போடிநாயக்கனூரில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார்.

எதிர்த்துப் போட்டியிட்ட நிர்மலா
இந்தத் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் வெண்ணிற ஆடை நிர்மலா. ஜானகி அணி சார்பி்ல் இரட்டைப் புறா சின்னத்தில் நின்றார் நிர்மலா.

வெறும் 1512 ஓட்டுக்களே
ஆனால் அவருக்கு வெறும் 1512 ஓட்டுக்களே கிடைத்தன. படு தோல்வியைச் சந்தித்தார். 4வது இடத்தைப் பிடித்தார். டெபாசிட்டையும் இழந்தார்.
-
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications